ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

சோமநாத சுவாமி திருக்கோயில், கீழப்பழையாறை

 கீழப்பழையாறை :

குடந்தைக்கு அருகில் 5கிமீ தொலைவில் உள்ளது. 

கீழப்பழையாறை : சோழமன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியத் தலம். 

பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை.

 பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாயிற்று.  சோழர்களின் அரண்மனை கூட இங்கு இருந்தது என்ற செய்திகள் வரலாற்றில் உள்ளன.

சோழர் அரண்மனை இருந்த இடம் “சோழன்மாளிகை” என்னும் தனி ஊராக உள்ளது

இவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் – பழையாறை நகர் என்றும்,              8-ஆம் நூற்றாண்டில் – நந்திபுரம் என்றும், 9, 10-ஆம் நூற்றாண்டுகளில் – முடிகொண்ட சோழபுரம் என்றும், 12-ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றுள்ளது.

மங்கையர்க்கரசி நாயனார் அவதரித்த தலம்.

மங்கையர்க்கரசியார் – இவர் மணிமுடிச் சோழனின் மகள் என்பர். இவன் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவன். 

அமர்நீதி நாயனார் அவதரித்த  தலம்


கீழப்பழையாறையில் கற்றளியாக இருந்த இடம் இன்று காலத்தின் கரங்களில் சிக்குண்டு சிதைந்தி நிற்கும் கோயில் உள்ளது.


இறைவன் : சோமநாத சுவாமி

இறைவி: சோமகமலாம்பிகை

பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் மூன்று தளங்களைக் கொண்ட புதிய ராஜகோபுரம் காணப்படுகிறது. அதற்கு அடுத்து உயர்ந்த தளத்தில் மூலவர் சன்னதி காணப்படுகிறது.

மூலவர் சன்னதிக்கு உயர்ந்த தளத்தில் படியேறி உள்ளே செல்லும்போது தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் காணப்படும் ராஜகம்பீர மண்டபத்தைப் போல் உள்ளது. தேர் போன்ற அமைப்பினைக் காணமுடிகிறது.

தாராசுரம் கோவிலின் முன்மாதிரியாக இக்கோயில் இருந்திருக்க வேண்டும்.

அக்கோபுரத்தினை அடுத்து வலப்புறம் இக்கோயிலுக்கான இறைவியான சோமகமலாம்பிகை சன்னதி உள்ளது. 

சோமகமலாம்பிகை சன்னதிக்குச் செல்லும் படிக்கட்டில் தென்திசையில் உள்ள வீரநரசிம்மர் சிற்பத்தின் கிழக்கு புறத்தில் சிற்றுவத்தில் வீரன் ஒருவன் உடைவாளை உருவியபடி நிற்க, அவனது தலையின் மீது சிவன் தனது வலது காலை ஊன்றியும், இடது காலை தன்னுடைய தலைக்கு மேல் கொண்டுவந்து வலது காதைத் தொடும் நிலையில் உள்ள காட்சி ஊர்த்துவ தாண்டவமாக வடிக்கப்பட்டுள்ளது.


ராஜராஜனின் தமக்கை குந்தவைக்கு மிகவும் பிடித்த கோயிலாம் இது. ஆனால் இன்று இறைவனும், இறைவியும் ஏகாந்தமாக இருக்கிறார்கள். அவ்வப்போது நாமும் சென்று அவர்களது மோனநிலையை கலைப்போம். 




























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக